Police Department News

மதுரை திருமங்கலம் பகுதியில் எல்லை பாதுகாப்பு படைவீரர் வீட்டில் திருட்டு

மதுரை திருமங்கலம் பகுதியில் எல்லை பாதுகாப்பு படைவீரர் வீட்டில் திருட்டு

மதுரை மாவட்டம் திருமங்கலம் விடத்தகுளம் ரோடு மீனாட்சி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது48). எல்லை பாதுகாப்பு படைவீரர். இவரது மனைவி தேவி (45). இவர்களது மகள் மோனிஷா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் மோனி ஷாவை சென்னையில் உள்ள கணவர் வீட்டில் விட்டு வருவதற்காக கடந்த 30-ந் தேதி முருகேசன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்று விட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முருகேசன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, லேப்டாப் உள்ளிட்டவைகளை திருடி சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த முருகேசன் தனது வீட்டில் நகை கொள்ளை போனது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.