Police Department News

கோயம்புத்தூரில் 7-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவன் உள்பட 3 பேர் கைது

கோயம்புத்தூரில் 7-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவன் உள்பட 3 பேர் கைது

கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுமி.

இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர். தந்தை குடிகாரர்.

சிறுமி வீட்டின் அருகே திருநங்கை ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 20-ந்தேதி அவர் சிறுமியிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் சிறுமி 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்தாக தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த திருநங்கை குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சிறுமியின் வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

அங்கு வைத்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி வீட்டின் அருகே மதன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 12-ந் தேதி மதன் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சிறுமி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு வீட்டின் அருகே வசிக்கும் 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுவனும் கடந்த 15-ந்தேதி சிறுமியை அந்த பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

மேலும் சிறுமியின் தந்தையின் நண்பரான சதாசிவம் (48) என்பவரும் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 15 வயது சிறுவன், மதன், சதாசிவம் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மற்ற 2 பேரை ஜெயிலிலும் அடைத்தனர்

Leave a Reply

Your email address will not be published.