Police Department News

பாலக்கோடு பி.செட்டிஅள்ளி கிராமத்தில்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர் .

பாலக்கோடு பி.செட்டிஅள்ளி கிராமத்தில்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர் .

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் பி.செட்டஅள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கணபதி தலைமையில் இன்று கிராமசபைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்த கிராமசபை கூட்டத்தில் பாலக்கோடு காவல்துறை சார்பாக காவலர்கள் கலந்து கொண்டு பெண்கள் பொது இடங்களில் செல்போன் பேசிக் கொண்டு செல்லும் போது குழந்தைகளை மறந்து விடுவது, பேருந்துகள் மற்றும் திருவிழாக்களில் தேவையின்றி தங்க ஆராணங்களை அணிய வேண்டாம், ஏ.டி.எம் மையங்களில் முன் பின் தெரியாதவர்களிடம் இரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டாம் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இக்கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர் தாம்சன், வேளாண்மை உதவி இயக்குநர் அருள்மணி காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால், கவுன்சிலர் முத்துசாமி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.