Police Department News

மேலூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மேலூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் மேலூரில் பேங்க் ரோட்டில் வாடகைக்கு வீடு பிடித்து சாலையோரம் பழ வியாபாரம் வசித்து வருகிறார்.

இவரது மகன் அண்ணாமலை (வயது20). இவர் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு சிவில் படித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் தனக்கு ஸ்மார்ட் செல்போன் வாங்கித் தரும்படி வீட்டில் கேட்டுள்ளார். பெற்றோர் வாங்கி தர மறுக்கவே நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் என்ஜினீயரிங் மாணவர் அண்ணாமலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அண்ணாமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.