அகில இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு கடந்த 28.11.2019 முதல் 29.11.2019 -ம் தேதி வரை உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழக காவல் துறை சார்பாக கலந்துக்கொண்ட சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் இ.கா.ப, அவர்கள் மற்றும் தேவகோட்டை உதவி கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் இ.கா.ப, அவர்களும் இணைந்து குற்றம் மற்றும் குற்றவியல் இணைய அமைப்பு (CCTNS) மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு (ICJS) ஆகியவற்றின் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மாநாட்டில் எடுத்துரைத்தனர். மேலும் குற்ற தடுப்பு நடவடிக்கையில் டோல்ஸ்கோப் என்ற புதிய தொழில்நுட்பத்தை தமிழக காவல்துறை சார்பில் இருவரும் இணைந்து நாடு முழுவதிற்கும் தொடங்கி வைத்தனர். மேலும் இம்மாநாட்டில் கலந்துக்கொண்ட அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.