Police Department News

கடலூர் அருகே முன்விரோத தகராறில் இரு தரப்பினருக்குள் மோதல்: 4 பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு

கடலூர் அருகே முன்விரோத தகராறில் இரு தரப்பினருக்குள் மோதல்: 4 பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு

கடலூர் அருகே முன் விரோத தகராறில் இரு தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது.கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு வி. பெத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஜெய்சூரியாவும், பழனிவேலுவும் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஞானசவுந்தரி, வள்ளி ஆகிய 2 பெண்கள் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஜெயசூர்யா கொடுத்த புகாரின் பேரில் பழனிவேல், பாலாஜி, சங்கீதா, வள்ளி ஆகியோர் மீதும் , வள்ளி கொடுத்த புகாரின் பேரில் கனகராஜ், ஜெயசூர்யா, ஞானசவுந்தரி என தனி தனியாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.