Police Department News

கஞ்சா விற்றவர்களை பிடித்த காவலர்களுக்கு பாராட்டுபோ

திருப்பூர் மாநகர ஊரக காவல் நிலைய BEAT-I போலீசார் மணிகண்டன் மற்றும் பெரியசாமி (த சி கா) என்பவர் ரோந்து பணியில் இருக்கும்போது செட்டிபாளையம் பிரிவில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அந்தப் பகுதிக்குச் சென்ற ரோந்து காவலர்கள் சந்தேகத்திற்கிடமாக அந்த பகுதியில் சுற்றித்திரிந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் மதுரையைச் சேர்ந்த மனோஜ் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜசேகர் என்பதும் அந்தப் பகுதிகளில் கஞ்சா விற்றது தெரியவந்தது அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சா விற்றவரை பிடித்த காவலர் மணிகண்டனை திருப்பூர் மாநகர துணை காவல் ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன் (இ.கா.ப) மற்றும் தெற்கு சரக உதவி ஆணையர் உயர்திரு.நவீன்குமார் மற்றும் மாநகர கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் உயர்திரு. செ.தங்கம் ஆகியோர் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர். M.சந்திரசேகர் திருப்பூர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.