Police Department News

பாலக்கோடு பேரூராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா

பாலக்கோடு பேரூராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகள்,
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள், வளமீட்பு பூங்காவில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஜல்சத்தி திட்டத்தில் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல் மற்றும் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா திடீர் ஆய்வுமேற்கொண்டார்
அப்போது பேரூராட்சி நிர்வாகம் கூசுகல் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.

மேலும் பாலக்கோடு பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது தர்மபுரி மண்டல உதவி இயக்குனர் குருராஜன், மண்டல செயற்பொறியாளர்கள் , மாவட்ட உதவி செயற்பொறியாளர்கள், பேரூராட்சி தலைவர் முரளி, செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர் ரவீந்திரன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.