Police Recruitment

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பின்னாலங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா இவருக்கும். காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த கருணா நிதி என்பவரின் மகன் துரைமுருகனுக்கு கடந்த 2019-ல் திருமணம் நடை பெற்றது.

இந்த நிலையில் துரை முருகன் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு ஐஸ்வரியாவை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

கணவர் ஐஸ்வர்யாவை கடுமையாக தாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜஸ்வரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து குன்றங்குடி போலீசில் ஐஸ்வரியா தாய் சுசிலா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜஸ்வரியா உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.