Police Recruitment

திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் தற்கொலை

திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் தற்கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் கருப்பசாமி என்ற கார்த்திக், என்ஜினீயர். சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுவேதா (19). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் சுவேதா சாத்தங் குடியில் கணவர் வீட்டில் தங்கி ஆலம்பட்டி யில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கர்ப்பமாக இருந்த சுவேதாவுக்கு கருவில் குழந்தை வளர்ச்சி இல்லை என தெரிய வந்ததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்தார்.

இதனால் அவர் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவரது மாமியார் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. தட்டி பார்த்தபோது கதவை திறக்கவில்லை.

இதையடுத்து அதே பகுதியில் வசிக்கும் சுவேதா வின்தந்தை கருப்பசாமிக்கு போனில் தகவல் தெரி வித்தார். அவரும், அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அப்போது சுவேதா தூக்கில் தொங்கிய படி பேச்சு, மூச்சின்றி இருந்தார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் திருமங்கலம் ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.