Police Department News

`வேலைக்குச் சென்ற பெண்; சோளக்காட்டில் சடலமாக மீட்பு!’ – அருப்புக்கோட்டை அதிர்ச்சி

`வேலைக்குச் சென்ற பெண்; சோளக்காட்டில் சடலமாக மீட்பு!’ – அருப்புக்கோட்டை அதிர்ச்சிஇன்று காலையில், மக்காச்சோளக்காட்டில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சத்தியபாமாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் சோளக்காட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பரளச்சி ராணிசேதுபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜின் மனைவி சத்தியபாமா. தினமும் காலை தனக்குச் சொந்தமான விவசாய காட்டிற்குச் சென்று விவசாய வேலைகளைக் கவனித்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.நேற்று, விவசாயக் காட்டில் பாசிப்பயறு பறிக்கச் சென்ற சத்தியபாமா நள்ளிரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், காட்டுப்பகுதியில் சத்தியபாமாவைத் தேடினர். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.உடனே பரளச்சி காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பின் காவல்துறையினரும் ஊர்மக்களும் மோப்பநாய் உதவியுடன் இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் தேடியும் சத்தியபாமாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.இன்று காலையில், மக்காச்சோளக்காட்டில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சத்தியபாமாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சத்தியபாமாவைக் கொலை செய்த கொலையாளிகள் அவர் உடலின் மீது சோளக்கதிர்களைப் போட்டு மூடியுள்ளனர்.இக்கொலைச் சம்வத்தை விசாரித்து வரும் காவல்துறையினர், சத்தியபாமா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.