Police Recruitment

வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் சாவு: போலீசார் விசாரணை

வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் சாவு: போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த கண்டபங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60) விவசாயி. இவர் நேற்று மாலை மாடுகளை மேய்பதற்காக வயல்வெளிக்கு சென்றார். அப்போது நிலத்தில் இருந்த மின் கம்பத்தில் தாழ்வான நிலையில் சென்ற மின்சார கம்பி அறுந்த நிலையில் இருந்துள்ளது. இதை கவனிக்காத பரமசிவம் அந்த வழியாக செல்லும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விவசாய நிலத்தில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியை சரிசெய்ய வழியுறுத்தி பலமுறை மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும் மின்கம்பியை உயர்த்த நடவடிக்கை எடுக்காததால் பரமசிவம் உயிரிழந்துள்ளார். என கூறி பரமசிவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மின்சார வாரியத்தை கண்டித்து விருத்தாசலம் – சேலம் சாலையில் கண்டபங்குறிச்சி எடைபாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்த னர். இதனையடுத்து போலீசார் இறந்த பரமசி வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.