Police Department News

கல்லூரி மாணவிகளை ஊக்குவித்த காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் – கலந்துரையாடலில் மாணவிக்கு புத்தகத்தை பரிசளித்தார்

கல்லூரி மாணவிகளை ஊக்குவித்த காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் – கலந்துரையாடலில் மாணவிக்கு புத்தகத்தை பரிசளித்தார்

இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான இரயில் பயண பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் 12.12.2019-ம் தேதியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இரயிலில் பயணம் செய்யும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டும்¸ இரயில்வே விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் மாணவர்களிடத்தில் பேசிய போது பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு தங்களை கல்லூரிக்கு அனுப்புகின்றனர் என்பதை உணர்ந்து நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் நீங்கள் படித்து முன்னேறினால் தான் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும். நீங்கள் இன்று முதல் தினசரி நாளிதழ்களை தொடர்ந்து படித்து வந்தால் அரசின் போட்டி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும். பாடங்களை புரிந்து படித்தால் மாணவர்கள் எளிதாக இலக்கை அடையலாம் என்றார். பின்னர் கல்லூரியில் நடந்த கலந்துரையாடலில் உடனுக்குடன் பதில் அளித்த மாணவிக்கு புத்தகத்தை பரிசளித்தார்

Leave a Reply

Your email address will not be published.