Police Department News

கரிக்கம்பட்டி சாலையில் ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவி உட்பட இருவர் படுகாயம்.

கரிக்கம்பட்டி சாலையில் ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவி உட்பட இருவர் படுகாயம்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சாமன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி சாம்ராஜ் என்பவரின் மகள் கீர்த்தனா (வயது.18) அதே ஊரை சேர்ந்த நவநீதன் (வயது .16)
கீர்த்தனா கோயமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார்,
இவர் விடுமுறைக்கு வீட்டிற்க்கு வந்தவர், இன்று காலை பாலக்கோடு செல்வதற்காக ஆட்டோவில் கீர்த்தனாவும் அதே ஊரை சேர்ந்த நாவீதன் என்பவரும் சென்று கொண்டிருந்தனர்.
கரிக்கம்பட்டி சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது,
இதில் கீர்த்தனா, நவநீதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.