Police Department News

புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; 5 பேர் கைது

புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; 5 பேர் கைது

புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்
சாத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மேட்டமலையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தனது பெட்டிக் கடையில் புகையிலை பதுக்கி விற்றதாக கைது செய்யப் பட்டார். இதே போல் நல்லான் செட்டி பட்டியை சேர்ந்த ஜெய கிருஷ்ணன் புகையிலை விற்றதாக கைதானார். இவர்களிடம் இருந்து 50 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர் அருகே மல்லாங்கிணறு வலுக்கலொட்டி பகுதியை சேர்ந்தவர் உமையொரு பாகம். இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பாக்கெட்டு களை விற்றதாக மல்லாங்கிணறு போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 3 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட் டுகள் பறிமுதல் செய்யப் பட்டன.
இதேபோல் சேத்தூர் போலீசார் சம்பவத்தன்று ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் உள்ள தேவிபட்டினம் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது அதில் புகையிலை பாக்கெட் டுகள் கடத்தியது தெரிய வந்தது. காரில் வந்த தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த கார்த்திக், ராஜபாளையம் முகவூரை சேர்ந்த ஜான்வின்சென்ட் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.