Police Department News

மதுரை ஆத்திகுளம் பகுதியில் அரசு குடியிருப்பு சேதம் தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை

மதுரை ஆத்திகுளம் பகுதியில் அரசு குடியிருப்பு சேதம் தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை

மதுரை ஆத்திகுளம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மத்திய அரசின் யோஜனா திட்டத்தில் ரூ. 30 கோடியில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக உள்ளன பிப்ரவரி 1 ல் இக்குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடி கதவு உள்ளிட்டவற்றை போதையில் சிலர் அடித்து ரகளையில் ஈடுபட்டனர்

இதன்படி புகாரின் அடிப்படையில் புதூரை சேர்ந்த 17 வயது சிறுவன் கி.ருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த முத்து மணிகண்டன் அவனியாபுரத்தை சேர்ந்த வல்லரசு ஆகியோர் கஞ்சா போதையில் அடித்து சேதப்படுத்தியது உறுதியானது அவர்களை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.