Police Department News

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் வழிப்பறி

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் வழிப்பறி

மதுரை ஜெய்ஹிந்துபுரம் B6 காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான ஜீவா நகர் 2 வது தெருவில் வசிக்கும் கனேசன் என்பவரது மகன் செந்தில்குமார் வயது 32/24, இவர் கால் டாக்ஸி ஓட்டும் தொழில் செய்து வருகிறார்
இவர் நேற்று ( 11.02.24) இரவு சுமார் 8 மணியளவில் தனது கால் டாக்ஸியை தனது தாயார் வீட்டருகே நிறுத்தி விட்டு வரும்போது சுமார் 25 வயது மதிக்கதக்க 3 நபர்கள் இவரிடம் வந்து சரக்கடிக்கனும் காசு கொடு என கேட்டுள்ளனர் அதற்கு நான் எதற்கு உனக்கு காசு தரனும் என கேட்கவே அதில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரின் வயிற்றில் வைத்து அழுத்தி கொண்டு பையில் உள்ள பணத்தை எடு என சொல்ல அதற்கு என்னிடம் பணம் இல்லை என கூற இரணடாம் நபர் அவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து அழுத்தி கொண்டு மூன்றாம் நபரிடம் இவன் பையில் இருக்கும் பணத்தை எடுக்க சொல்ல அவன் பையில் இருந்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தினர் இதனை கண்ட செந்தில்குமாரின் தாயார் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர் உடனே வழிப்பறி செய்த மூவரும் அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டவே அவர்கள் தங்களது வீட்டிற்குள் சென்று கதவை அடைத்து கொண்டனர் பிறகு செந்தில்குமார் ஜெய்ஹிந்துபுரம் B.6 காவல் நிலையம் வந்து நடந்த விபரம் கூறி புகார் அளித்தார். புகாரின்படி காவல்துறையினர்
காவல் நிலைய குற்ற எண் 63 /24 படி U/S. 392 r/w 397 506 (2) IPC ன்படி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து ஒருவனை பிடித்து விசாரித்ததில் அவன் அதே பசூதியை சேர்ந்த வேலு மகன் நரி விக்னேஷ் வயது 29/24, என தெரிய வந்தது விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.