Police Department News

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் B6 காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியான தேவர் நகர் 1 வது தெருவில் குடியிருந்து வருபவர் தவமணி வயது 47/24. இவரது கணவர் சிவஞானம் வயது 48/24 இவர் மாவு மில்லில் வேலை செய்து வந்தார் இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இவர் கடந்த 17 ம்தேதி காலை 6 மணிக்கு வழக்கம் போல் மாவு மில்லுக்கு வேலைக்கு சென்றவர் சாப்பாட்டிற்கு வீடு திரும்பவில்லை, இந்த நிலையில் மதியம் 1 மணியளவில் மாவு மில்லில் இயந்தரம் பழுது பார்க்கும் கனேசன் என்பவர் தவமணிக்கு போன் செய்து சிவஞானம் மாவு மில்லில் தனக்கு தானே தூக்கிட்டு கொண்டதாக கூற உடனே நேரில் வந்து பார்த்து அவரை கீழே இறக்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு மருத்துவர்கள் சிவஞானம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் உடனே தவமணி அவர்கள் ஜெய்ஹிந்த்புரம் B6 காவல் நிலையம் வந்து புகார் அளித்து தங்களின் குல வழக்கப்படி கணவரின் உடலை நல்லடக்கம் செய்ய உ.ரிய முறையில் விசாரணை செய்து உடலை பெற்று தரும்படி கொடுத்த புகாரை பெற்று கொண்டு நிலைய குற்ற எண். 73 ன்படி குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 174 ன்படி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.