Police Department News

கதிரம்பட்டி மொடக்குபாறை அருகே நாட்டு துப்பாக்கி கண்டெடுப்பு .

கதிரம்பட்டி மொடக்குபாறை அருகே நாட்டு துப்பாக்கி கண்டெடுப்பு .

தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த கதிரம்பட்டி பகுதியில் பாறை இடுக்கில் நாட்டு துப்பாக்கி இருப்பதாக, பாலக்கோடு வனத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து வனக்காவலர் மற்றும் மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று சோதனை மேற்கொண்டதில், கதிரம்பட்டி, மொடக்குபாறை அருகே பாறை மறைவில் நாட்டு துப்பாக்கி ஒன்று இருந்ததை கண்டெடுத்தனர்.

சமூக விரோதிகள் சிலர் சட்டத்திற்க்கு புறம்பாக விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்த மறைத்து வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.
மேலும் இது குறித்து மகேந்திரம் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.