Police Department News

பெல்ரம்பட்டியில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்த டிராக்டர் டிரைவர் மீது, டிராக்டர் ஏறியதில், டிரைவர் பரிதாப சாவு .

பெல்ரம்பட்டியில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்த டிராக்டர் டிரைவர் மீது, டிராக்டர் ஏறியதில், டிரைவர் பரிதாப சாவு .

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த, பெல்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் அருள் (வயது.30) இவருக்கு திருமணமாகி இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
அருள் பெல்ரம்பட்டியில் உள்ள அண்ணாமலை என்பவரது நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார்,
அப்போது எதிர்பாரதவிதமாக டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் டிராக்டர் சக்கரம் அருள்மீது ஏறியது,
இதில் பலத்த காயமடைந்தவரை மீட்டு உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.