Police Department News

கால்பந்து விளையாட பயிற்சி தருவதாக அழைத்து சென்று 3, 4ம் வகுப்பு மாணவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு: 8, 9ம் வகுப்பு மாணவர்கள் போக்சோவில் கைது

கால்பந்து விளையாட பயிற்சி தருவதாக அழைத்து சென்று 3, 4ம் வகுப்பு மாணவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு: 8, 9ம் வகுப்பு மாணவர்கள் போக்சோவில் கைது

சேத்துப்பட்டு பகுதியில் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவர்களை கால்பந்து விளையாட பயிற்சி அளிப்பதாக மொட்டை மாடிக்கு அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு அளித்த தனியார் பள்ளியை சேர்ந்த 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வி (29, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கடந்த 23ம் தேதி பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.

அதில், எனது மகன் அருகில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான்.

அவனது நண்பன் அதே பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான்.

இருவரும் வீட்டின் அருகே உள்ள நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவது வழக்கம்.

கடந்த 23ம் தேதி எனது மகன், தனது நண்பனுடன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 மற்றும் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது தனியார் பள்ளியில் படிக்கும் அந்த மாணவர்கள், எனது மகன் மற்றும் அவனது நண்பனுக்கு கால்பந்து விளையாட பயிற்சி அளிப்பதாக வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து ெசன்று பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.

எனவே எனது மகனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

அந்த புகார், கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது.

அதன்படி மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது நடந்த சம்பவத்தை சிறுவர்கள் போலீசாரிடம் கூறினார்.

அதைதொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த பிரபல தனியார் பள்ளியில் 8 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது, குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் மீது போக்சோ மற்றும் ஐபிசி 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்கு பதிந்து கைது செய்தனர்.

பின்னர், அவர்களை கெல்லீஸில் உள்ள சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

சேத்துப்பட்டு பகுதியில் சிறுவர்களை பாலியல் தொந்தரவு அளித்த 2 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.