Police Department News

மதுரையில் முன்விரோதம் காரணமாக ஆயுதங்களுடன் மோதி கொண்ட வாலிபர்கள் கைது

மதுரையில் முன்விரோதம் காரணமாக ஆயுதங்களுடன் மோதி கொண்ட வாலிபர்கள் கைது

முன்விரோதத்தில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட ரவுடிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மதுரை சிந்தாமணி கண்ணன் காலனி சேர்ந்தவர் சக்திவேல் (24) இவருக்கும் கண்ணன் காலனி குமரன் தெருவை சேர்ந்த 19 வயதுடைய வாலிபருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் அவரது நண்பர்களான சரவணன்,, முத்துப்பாண்டி மற்றும் அருண்பாண்டி ஆகியோருடன் கண்ணன் காலனி கருப்பசாமி கோயில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 19 வயதுடைய வாலிபர் மற்றும் அவரது நண்பர்களான கண்ணன் காலனி சேர்ந்த சிவக்குமார் வயது 20 பாண்டி, நந்தா ஆகியோர் சரவணன் மற்றும் சக்திவேல் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் தனியார் மருத்துவமனையிலும் சரவணன் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பெயரில் கீரை துறை போலீசார் வழக்குப்பதிந்து 19 வயதுடைய வாலிபர் உள்பட இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர் அதே நேரம் சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்களை தங்களது கூட்டாளிகளாக சேர்த்து கொள்ளுமாறு சக்திவேல் மற்றும் சரவணன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக கீரை துறை போலீசில் சிவக்குமார் புகார் அளித்துள்ளார். இப் புகாரின் பேரில் சக்திவேல் மற்றும் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.