Police Department News

மதுரையில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை எம்.கே.புரம் காஜா தெருவில் உள்ள  பாழடைந்த வீட்டுக்குள் 15-க்கும் மேற்பட்டோர் பணம் வைத்து சீட்டு சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு   தகவல் வந்தது.  

தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். இதில் அங்கு பதுங்கி இருந்த 15 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 3 சீட்டு கட்டுகள், ஜமுக்காளம், சார்ஜர் மற்றும் ரூ.50 ஆயிரத்து 450, 13 செல்போன்கள்   பறிமுதல் செய்யப்பட்டன.

அனைவரையும் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.   அவர்கள் காஜாதெரு காளிதாஸ் (35),பழங்காநத்தம், பசும்பொன் நகர் மாணிக்கம் (61),ஆண்டாள்புரம் மீனாட்சி மில் பழைய காலனி முத்துப்பாண்டி (47), பைக்காரா சஞ்சீவி (42) வில்லாபுரம் மீனாட்சி நகர் சின்னையா தெரு, காஜா மைதீன் (40),ஆண்டாள்புரம் ஓதுவார் மடம் மீனாட்சி சுந்தரம் (46), சவுராஷ்ட்ரா புரம், சகாயமாதா தெரு சேக் காதர், கோரிப்பாளைம் சோமசுந்தரம் தெரு கண்ணன் (53), காலாங்கரை ரிசர்வ் லைன் முத்துராஜா (36), ஆண்டாள்புரம் ராமலிங்க நகர் பாண்டிய ராஜன் (38)
பழங்காநத்தம் வ.உ.சி தெரு சையது முகம்மது (50), நாகமலை புதுக்கோட்டை நாகராஜன் (42),தெப்பக்குளம் பாத்திமா ஜின்னா தெரு அருண்பாபு (45), திருநகர் பாலாஜி தெரு மகேந்திரன் (44), எச்.எம்.எஸ் காலனி சந்திரன் (49) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். 

Leave a Reply

Your email address will not be published.