Police Department News

ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட போலீஸ்காரரின் மண்டை உடைப்பு போதை ஆசாமிகள் 3 பேர் கைது.

ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட போலீஸ்காரரின் மண்டை உடைப்பு போதை ஆசாமிகள் 3 பேர் கைது.

பெரம்பூர் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கிஷோர் (24). அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் ஐ.சி.எப் வழியாக பைக்கில் சென்றபோது, அங்கு போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபடுவது தெரிந்தது. அவர்களை காவலர் கிஷோர் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் கிஷோர் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியுள்ளனர். இதில், கிஷோர் மண்டை உடைந்தது. இதுகுறித்து ஐசிஎப் போலீசார் வழக்கு பதிவு செய்து கிஷோரை தாக்கிய வில்லிவாக்கத்தை சேர்ந்த அருண்குமார் (33), சரண் குமார் (23), ராகேஷ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published.