Police Department News

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்.

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்.

தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்ததாக காவல் நிலையத்தில் பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் யாசர் அராபத் மற்றும் மூன்று நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில். இவ்வழக்கு 17.02.2020-ம் தேதியன்று தேனி மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்றதில் நீதிபதி திருமதி.கீதா.ML., அவர்கள் போலீசார் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் யாசர் அராபத் மற்றும் மூன்று நபர்கள் குற்றவாளி என்பதை உறுதி செய்து , யாசர் அராபத்க்கு ஆயுள் தண்டனையும் மற்ற மூன்று நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினர் மற்றும் அரசு வழக்குரைஞர் ஆகியோர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி, இ.கா.ப., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.