அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் வருடாந்திர நினைவூட்டல் காவத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 18/02/2020 அன்று காலை வருடாந்திர கூட்டு திரட்டு காவத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் , ஆயுதப்படை ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் தலைமையிலான காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்கள். அதன்பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களை Turn-out ஆய்வு செய்தார்கள். மேலும் மாவட்ட நாய் படைப்பிரிவின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள்.இந்த நிறைவு விழாவில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணவாளன் அவர்கள் மற்றும் அரியலூர் போக்குவரத்து ஆய்வாளர் திரு.மதிவாணன், ஆயுதப்படை ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடன் இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் நினைவூட்டல் கவாத்து பயிற்சி 15 நாட்கள் நடைபெறும் அதன்பின்பு பயிற்சி நிறைவு விழா நடைபெறும்.
பின்னர் காவலர்கள் மத்தியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்கள் தன்னம்பிக்கை உடன் இருக்க வேண்டும் எனவும்,ஒவ்வொரு காவலர்களும் சுய கட்டுப்பாடு உடன் இருக்க வேண்டும் எனவும் நாம் ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் சிறப்பு மிக்க நம் தமிழக காவல்துறைக்கு மேலும் பெருமை சேர்க்க விதமாக இருக்கவேண்டும் என்று கூறினார்.பின்னர் விழா இனிதே நிறைவுற்றது.