Police Department News

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று உதவி வரும் கும்பகோணம் போலீசார்

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று உதவி வரும் கும்பகோணம் போலீசார்

கொரானா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் இருக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் உடல்நலக் குறைவினால் அவதிப்பட்டு வரும் முதியவர்கள் மருந்து பொருட்கள் வாங்க வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கும் நடவடிக்கையாகயும்¸ முதியவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்கும் வகையிலும் கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன் அவர்கள் கும்பகோணம் பகுதியில் காவலர்கள் அடங்கிய ( 9791722688, 6383108227 ) எண் கொண்ட ஒரு வாட்ஸ் குழுவினை அமைத்து வெளியே வர முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான மருந்து பொருட்களை வாங்கி வீடு தேடி சென்று கொடுத்து உதவி வருகின்றனர். இச்சேவைக்கு காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.