Police Department News

வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேடிச் சென்று உதவி புரிந்த காவல்துறை.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேடிச் சென்று உதவி புரிந்த காவல்துறை.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி, இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து
திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் 1997-ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற முதல் பேஜ் காவலர்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழு மூலம் இணைந்து முதல் முறையாக வீரமரணமடைந்த ராணுவ வீரருக்கு அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்திற்கு நேரில் சென்று ரூ.1லட்சத்து 18ஆயிரத்தை பணத்தை ராணுவ வீரர் பழனி குடும்பத்தாரிடம் ரொக்கமாக அளித்தார்.

காவல் துறை நண்பர்கள் இணைந்து இராணுவத்திற்கு உதவுகிறது இதுவே முதல் முறை.
இதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறை வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.