சென்னையில் பாலியல் தொழில் ஈடுபட்ட 5 பேர் கைது..!!
சென்னை அடுத்த துரைப்பாக்கத்தில் பாலியல் தொழில் நடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடையாறு துணை ஆணையர் விக்ரமனின், செல்போன் எண்ணிற்கு வந்த புகாரை தொடர்ந்து அவர், துரைப்பாக்கம் போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, போலீசார் விசாரணையில், குடியிருப்பில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை மிரட்டி பாலியல் தொழில் செய்து வந்ததை உறுதி செய்த போலீசார், தரகர்கள் அசோக், ஹேம துல்லா, ராஜராஜன், ஏசுதாஸ், சாமுவேல் ஆகியோரை கைது செய்து, பெண்கள் மூன்று பேரையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.