Police Department News

துரை முத்துப்பட்டி பகுதியில் நடக்கவிருந்த கொள்ளை தடுப்பு, ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது

மதுரை முத்துப்பட்டி பகுதியில் நடக்கவிருந்த கொள்ளை தடுப்பு, ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது

மதுரை மாநகர் சுப்ரமணியபுரம் C2, காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. பிரியா அவர்கள் 09/08/2020, அன்று காலை 5 மணியளவில் குற்றத் தடுப்பு சம்பந்தமாக சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.S.A.செய்யது பாபு,
திரு.P.விஸ்வநாதன், த.கா 1667,
திரு.V.பிரபாகரன் த.கா.2823,
திருமதி. R.வசந்தி த.கா 3269,
ஆகியோருடன் சேர்ந்து காலை ரோந்தாக முத்துப்பட்டி மெயின் ரோடு, பாலாஜி தெரு சந்திப்பிடம் வந்த போது
TN.58 AB 5766 TVS Sport,
TN.58 AM 6288 Yamaha F2 மற்றும்
TN 58 R 3742 passion pro ஆகிய மூன்று, இருசக்ர வாகனங்களில் மொத்தம் ஆறு பேர் வந்தனர், அவர்கள் காவலர்களை பார்த்ததும் வாகனங்களை திருப்பி கொண்டு தப்பிச் செல்ல எத்தனித்தனர் ஆனால் காவலர்கள் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருந்தனர். மேலும் விசாரணை செய்த போது, அவர்கள்
1) அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்த கனேசன் மகன் விஜய் வயது 25/2020,
2) ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பாண்டி மகன் தனபாண்டி வயது 22/2020,
3)குமாரம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஆனந்த் வயது 22/2020,
4) கீழ முத்துப்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் கார்த்திக் என்ற தொர கார்த்திக் வயது 28/2020,
5)வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த குமார் மகன் மொளதன் வயது 20/2020,
6) வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மெளலி வயது 25/2020, என தெரிய வந்தது. மேலும் லாக் டவுனாக இருப்பதால் ஏதாவது டிபார்மெண்ட் ஸ்டோர் பூட்டை உடைத்து கூட்டுக் கொள்ளையடிக்க ஒன்று கூடி திட்டம் தீட்டி அதற்கான முன்னேற்பாடுகளுடன் ஆயுதங்களோடு சேர்ந்து வந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து ஆய்வாளர் பிரியா அவர்கள் , அவர்கள் மீது IPC 399 பிரிவின்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின் விசாரணை செய்து, நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

போலீஸ் இ நியூஸிற்காக
மாவட்ட செய்தியாளர்கள
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.