இறந்த காவலரின் மகளுக்கு உதவிய காவல் ஆணையர்
சென்னை¸ புனிததோமையர் மலை உடல் நலக்குறைவால் இறந்த தலைமை காவலர் ஒருவரின் பெண் தனது குடும்பத்தை இன்னும் சில காலம் காவலர் குடியிருப்பில் தங்க வைக்க அனுமதி கேட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால்¸ இ.கா.ப அவர்களை அணுகினார். கோரிக்கையை பரிசீலித்து அந்த இடத்திலே ஒப்புதல் அளித்தது மட்டுமல்லாமல் சிறுமியின் கல்வி நிலை குறித்து விசாரித்து கல்லூரியில் சேர முடியாமல் தவித்த அந்த சிறுமிக்கு காவல் ஆணையர் அவர்கள் தனிப்பட்ட முறையில் சம்மந்தப்பட்ட கல்லூரி அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சிறுமியை தங்க வைக்கவும்¸ நிதி உதவிக்காகவும் கோரியிருந்தார். 20.08.2020ம் தேதி கல்லூரி வழங்கிய சேர்க்கை கடிதத்தையும்¸ முழுபாட நெறிக்கான கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ததற்கான கடிதத்தையும் ஒப்படைத்தார். இது போன்று 50 மாணவர்களுக்கு சேர்க்கை கடிதத்தை வழங்கியும்¸ மேலும் 150 பேர் சார்பாக செய்யப்பட்ட கோரிக்கை வேறு பல கல்லூரிகளில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.