Police Department News

வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 ம் நாள் நினைவு அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம்

வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 ம் நாள் நினைவு அஞ்சலி

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 வது நாள் நினைவு அஞ்சலி தமிழ் நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல் துறையினர்கள் நலச் சங்கம், தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 18 ம் தேதி அன்று துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்ற போது ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடி குண்டை வீசியதில் காவலர் தெய்வத் திரு சுப்பிரமணியன் அவர்கள் வீர மரணம் அடைந்தார். அவர் வீர மரணமடைந்து இன்று 16 வது தினம் என்பதால், தமிழ் நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல் துறையினர் நலச் சங்கம், தூத்துக்குடி மாவட்டம் சார்பாக காவலர் சுப்ரமணியன் அவர்களின் வீர தீர செயலைப் போற்றும் வகையிலும், அவரது வீர மரணத்திற்கு இன்று 16 ம் நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் அனைவரும் காவலர் சுப்பிரமணியன் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரையிலிருந்து
M.அருள்ஜோதி

Leave a Reply

Your email address will not be published.