Police Department News

மதுரை, கூடல்புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, விபச்சாரம், இரண்டு பெண்கள், மற்றும் இரண்டு புரோக்கர்கள் கைது

மதுரை, கூடல்புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, விபச்சாரம்,
இரண்டு பெண்கள், மற்றும் இரண்டு புரோக்கர்கள் கைது

மதுரை கூடல்புதூர், ஆனையூரில் விபச்சாரம் நடப்பதாக ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி ஹேமாமாலா அவர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவர்கள் கூடல்புதூர் D3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்களிடம் புகார் அளித்து, ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்கள் மற்றும் காவலர்களுடன் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது ஆனையூர், TNHB காலனி, மல்லிகை நகரில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து போலீஸார் அங்கே விரைந்து சென்ற போது, போலீஸாரை கண்டவுடன் வீட்டிலிருந்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் தப்பி ஓடினார்கள். தப்பி ஓடிய நான்கு பேரையும் போலீசார் வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில், அவர்கள் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சேகர் மனைவி ராஜேஸ்வரி என்ற பத்மாவதி வயது 41/2020,
மதுரை வசந்த நகரைச் சேர்ந்த தர்மலிங்கம் மனைவி மணிமேகலை வயது 28/2020, என தெரிய வந்தது. மேலும் மதுரை, பி.பி.குளம், நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்த முத்துச்சாமி மகன் ரமேஷ்குமார் என்ற சபரி, வயது 35/2020,
மதுரை பி.பி.சாவடி, பல்லவ நகரை சேர்ந்த நாகையா மகன் சுருளிபொம்மையன் வயது 62/2020, எனவும் தெரிய வந்தது. இதில் ரமேஷ்குமார் என்ற சபரியும், சுருளி பொம்மையனும் புரோக்கர்களாக செயல்பட்டதாக தெரிகிறது.

இவர்களை கூடல்புதூர் D3, காவல் நிலைய ஆய்வாளர். திரு. கதிர்வேல் அவர்கள் ITP act 3(2)(a), 4(2)(c), 5(1)(a), 5(1)(d) படி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.