Police Department News

மதுரை அரசரடிப் பகுதியில் பொது முடக்கத்தின் போது வாங்கிய கடனை கட்டமுடியாமல் பழ வியாபாரி விஷம் அருந்தி தற்கொலை, கரிமேடு போலீசார் விசாரணை

மதுரை அரசரடிப் பகுதியில் பொது முடக்கத்தின் போது வாங்கிய கடனை கட்டமுடியாமல் பழ வியாபாரி விஷம் அருந்தி தற்கொலை, கரிமேடு போலீசார் விசாரணை

மதுரை மாநகர், கரிமேடு C5, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அரசரடியில் வசித்து வருபவர் தங்கச்சாமி, இவரது மகன் ராஜேந்திரன் இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார்,

இவருக்கு கொரோனா பொது முடக்கத்தின் போது போதிய வருமான் இல்லை எனவே அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார், ஆனால் அதை திரும்ப கட்ட முடியவில்லை, ஆகையால் மனமுடைந்த அவர் செப்டம்பர் மாதம் 25ம் நாள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார், அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.