Police Department News

காவல் ஆய்வாளரை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வரும் கோவில் காளை.

காவல் ஆய்வாளரை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வரும் கோவில் காளை.

25.10.2020.
மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்கள் பேருந்து நிலைய பகுதி வழியே செல்லும் போதெல்லாம் அவரை எதிர்பார்த்து காத்து இருப்பது போல சாலைகளில் திரியும் கோவில் காளை ஒன்று ஆனந்தத்தில் துள்ளி குதித்தவாறு வாகனத்தை நோக்கி ஓடி வருகிறது. உடனடியாக வாகனத்தை நிறுத்தும் ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்கள் வாழைப்பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை காளைக்கு வழங்கி வருகிறார்.
மேலும் அவர் கொடுக்கும் உணவை நிதானமாக காளை உண்டபின் நன்றி தெரிவிப்பது போல அவரது கையை நாக்கால் வருடிக் கொடுத்து விட்டு பின் அந்த இடத்தை விட்டுச் செல்கிறது.
காவல் ஆய்வாளருக்கு காளைக்கு இடையே தினசரி நடக்கும் அந்த ஐந்து நிமிட பாசப்போராட்டம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.