Police Department News

மதுரை, செல்லூர், அஹிம்சாபுரம் 6 வது தெரு விசாலம் பகுதியில் சாலையில் நடந்து சென்றவரிடம் செல் போன் பறிப்பு

மதுரை, செல்லூர், அஹிம்சாபுரம் 6 வது தெரு விசாலம் பகுதியில் சாலையில் நடந்து சென்றவரிடம் செல் போன் பறிப்பு

மதுரை, மாநகர், செல்லூர், அஹிம்சாபுரம் 6 வது தெரு விசாலம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற வாலிபரிடம் செல் போன் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, செல்லூர் பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக், என்பவர், கடந்த 29 ம் தேதி இரவு சுமார் 1.30 மணியளவில் செல்லூர் அஹிம்சாபுரம் 6 வது தெரு விசாலம் சபரீஸ் இடியாப்பக் கடை எதிரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, பின் தொடர்ந்து வந்த மூன்று இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல் போனை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர், இதனையடுத்து அபுபக்கர் சித்திக், செல்லூர் D2, குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அந்த புகாரின் அடிப்படையில் குற்றப் பிரிவு ஆய்வாளர் திருமதி. நாகராணி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.ஶ்ரீதர் அவர்கள் வழக்குப் பதிவு செய்து, வழிப்பறி செய்த நபர்களை தேடி வந்த நிலையில் நேற்று 30 ம் தேதி நெல்பேட்டையை சேர்ந்த பீர் அலி மகன் ரியாஸ்கான் வயது 20/2020, என்பவரை கைது செய்து விசாரணை செய்து அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர், மற்றும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். .

Leave a Reply

Your email address will not be published.