Police Recruitment

இமைகள் மூடாமல் மக்களை காப்பாற்றிய தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.டேனியல்ராஜ் அவர்கள்

இமைகள் மூடாமல் மக்களை காப்பாற்றிய தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.டேனியல்ராஜ் அவர்கள்

தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் இரும்பலியூர் போன்ற இடங்களில் உள்ள மக்கள்..G.S.T சாலையில் அநேக வாகனங்கள் மூலமாக அரசாங்க அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகம் செல்கின்றனர்.மற்றும் பலர் அவசர வேலைக்காக செல்கின்றனர். வெளியூரிலிருந்து மக்கள் தமிழ் நாடு அரசு பேருந்தை பயன்படுத்தி பணிக்கு வருகிறார்கள்.இப்படிபட்ட நிலையை கருத்தில் கொள்ளாமல் பா.ம.கட்சியினர் போராட்டம் என்ற போர்வையில் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கினர்.ஆதலால் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.டேனியல் அவர்கள் மக்கள் பாதிக்காத வகையில் போக்குவரத்தை தடுப்பு சுவர் அமைத்து இயந்திரங்கள் மூலமாக சரிசெய்து மக்கள் அவரவர் பணிக்கு நேரம் தவறாமல் செல்ல வழிவகுத்தார்.மற்றும் பா.ம.கட்சியினர் போராட்டம் முடியும் வரை மக்களுக்கு எந்தவித சமுதாய சிக்கல் வராமலும் பாதுகாத்துகொண்டார்.விடியவிடிய மக்களை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார்.அரசாங்கம் உத்தரவுபடி போராட்டக்காரர்களையும் மக்களையும் மிகவும் எவ்வித பாதிப்பு இல்லாமல் பாதுகாத்தார்.இப்படி இரவு பகல் பார்க்காமல் நேரத்துடன் சாப்பிடமுடியாமல் கால்வலி மற்றும் தூக்கத்தை இழந்து இமைகள் மூடாமல் பொதுமக்களுக்கு அநேக நன்மையான காரியங்களை செய்துவருகிறார் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.டேனியல் அவர்கள் .

Leave a Reply

Your email address will not be published.