Police Recruitment

மதுரை, மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதி முதியவர் பலி மேலூர் போலீசார் விசாரணை

மதுரை, மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதி முதியவர் பலி மேலூர் போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான அட்டபட்டி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கரடி என்பவரது மகன் செல்வராஜ் வயது 60/2020, இவர் கடந்த 7 ம் தேதி மாலை 7 மணியளவில் ஆடு மேய்து விட்டு ஆடுகளை பத்திக்கொண்டு கீழையூரிலிருந்து அட்டபட்டி ரோட்டில் சமத்துவபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வந்த இரு சக்கர வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்க்காமல் சென்று விட்டது. கீழே விழுந்தவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தவரை கீழவளவு காவல் நிலைய காவலர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மேலூர் அரசு மருந்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி , அதன் பின் மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் சிகிச்சை பலனின்றி நேற்று 9/12/2020 அன்று இறந்து விட்டார் வாகன விபத்து இறப்பு குறித்தும் வாகன விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற இரு சக்கர வாகனம் பற்றியும் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.