Police Department News

திருமணமான முன்னாள் காதலியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

திருமணமான முன்னாள் காதலியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஆந்திரமாநிலம் சித்தூரில் கைது செய்யப்பட்டார்.

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரி படிக்கும் போது கிரிம்ஸ்பேட் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞரை காதலித்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த பெண்ணுக்கு சித்தூரைச் சேர்ந்த பவன்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர் காதலிக்கும் போது தன்னுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து மிரட்டிய பிரகாஷ் அந்த பெண்ணை, பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதையும் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து பிரகாஷ் மிரட்டியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது நிலையை கணவரிடம் விளக்கினார். கணவன், மனைவி என இருவரும் இணைந்து சித்தூர் காவல்நிலையத்தில் பிரகாஷ் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் பிரகாஷை சித்தூர் போலீஸார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.