Police Recruitment

மதுரை மாநகரில், 32 வது சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், இலவச கண்சிகிச்சை முகாம் நடத்திய காவல் துறையினர்

மதுரை மாநகரில், 32 வது சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், இலவச கண்சிகிச்சை முகாம் நடத்திய காவல் துறையினர்

32 வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கடந்த 29 ம் தேதி மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் , தெற்கு அலுவலகத்தில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது, முகாமை மதுரை சரக இணை போக்குவரத்து ஆணையர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்த இலவச கண் பரிசோதனையை அரவிந்த் கண் மருத்துவ மனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு. செல்வம் (வடக்கு), திரு. சிங்காரவேலு (தெற்கு), திரு. கார்தியகேயன் ( செயலாக்கம்), மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. திருமலைக்குமார் அவர்கள், மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு. செந்தில்குமார், திரு. மாணிக்கம், திருமதி. அனிதா, மதுரை மாநகர போக்குவரத்து ஆய்வாளர்கள் திரு. கனேஷ்ராம், சார்பு ஆய்வாளர் திரு. அதியமான், மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 246 நபர்கள் இலவச கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.