Police Department News

ஓட்டல் அறையில் பதுக்கப்பட்டிருந்த 1,300 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வெள்ளேரியில், ஓட்டல் அறையில் பதுக்கி வைத்திருந்த 1300 போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்களை சப்ளை செய்த செஞ்சியைச் சேர்ந்த குமார் என்பவர் தலைமறைவான நிலையில் சையத் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நடத்தி வந்த ஓட்டலில் இருந்து இந்த மதுபாட்டில்களை ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்களைக் கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.