Police Recruitment

சென்னை பெருநகர காவல் . சென்னை பெருநகர தோமையர்மலை ஆயுதப்படை பிரிவில் பணி புரிந்து வந்த

சென்னை பெருநகர காவல் .
சென்னை பெருநகர தோமையர்மலை ஆயுதப்படை பிரிவில் பணி புரிந்து வந்த திரு வீ.கார்த்திக் மற்றும் பி.ரவீந்திரன் ஆகிய ஆயுதப்படை காவலர்கள் கடந்த 19 .2 .2021 அன்று அதிகாலை ஆவடியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலைய பாதுகாப்பு பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அம்பத்தூர் எஸ்டேட் ரோடு சந்திப்பில் கார் மோதி விபத்தில் உயிரிழந்தனர். மேற்படி காவலர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர். திரு மகேஷ்குமார் அகர்வால்.இ.கா.ப வழிகாட்டுதலின் பேரில் சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சுய விருப்பத்தின் பேரில் வழங்கிய மேற்கண்ட விபத்தில் இறந்து போன ஆயுதப்படை காவலர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு உதவிட ரூபாய் 28 லட்சம் பணம் பெறப்பட்டது இன்று (3.3.2021) மேற்படி இறந்த காவலர் ரவீந்திரனின் மனைவி . இலக்கியா. மற்றும் காவலர் கார்த்திக்கின் மனைவி திருமதி விஜயலட்சுமி ஆகியோரை குடும்பத்தினருடன் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் வரவழைத்து தலா 14 லட்சத்திற்கான காசோலைகளை நேரில் வழங்கி அவர்களின் குடும்பத்தினர்க்கு வர வேண்டிய பண பலன்களை விரைவில் வழங்கிட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவிட்டும் குடும்பத்தினர்க்கு உரிய ஆறுதல்கள் வழங்கியும் மேற்கண்ட காசோலைகளை வழங்கினார். உதவிக்கு காவலர்கள் நலனுக்காக உள்ள வெல்ஃபேர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெற்றுகொள்ள கேட்டுக்கொண்டார் இந்நிகழ்வின் போது கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் முனைவர் ஏ. அமல்ராஜ் இ.கா.ப இணை ஆணையர் திருமதி எஸ். மல்லிகா இ.கா.ப .ஆயுதப்படை துணை ஆணையர் திரு சௌந்தராஜன் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published.