Police Recruitment

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில்* தாழையுத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல தாழையூத்திலிருந்து தொடங்கி தென்கலம் விளக்கு, சங்கர் நகர் பாலம், 9th பஸ் ஸ்டாப், ராஜவல்லி புரம் இரயில்வே கேட், மற்றும் நகரின் முக்கிய பகுதி வழியாக வந்து தாழையூத்து பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெற்றது.

மேலும் இதேபோல் கொடி அனுவகுப்பு மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யூனியன் அலுவலகத்தில் தொடங்கி மானூர் பஜார் மற்றும் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மானூர் பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெற்றது.

இந்த கொடி அணிவகுப்பில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.அரச்சனா, எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி திரு. நரேந்திரன், தாழையூத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு. பத்மநாப பிள்ளை, மானூர் காவல் ஆய்வாளர் திரு ராமர், காவல் நிலைய‌ உதவி ஆய்வாளர்கள், மற்றும் அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர் 64 பேர், மற்றும் 40 உள்ளூர் போலீசார் உட்பட 104 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பதட்டமான பகுதிகளில் நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் அச்சமின்றி அவர்களது ஜனநாயக கடமையாற்றுவதற்கும், அமைதியாக தேர்தலை நடத்துவதற்கும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றும், பொதுமக்கள் யாரும் பணம் அல்லது பொருட்களை வாங்கிகொண்டு வாக்களிக்க வேண்டாம், நேர்மையான முறையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.