ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி விளையாட்டு சான்றிதழ் வழங்கி போலீஸ் பணிக்கு தேர்வான மேலும்3 பேரை போலீஸார் கைது செய்தனர். போலீஸ் பணிக்கான தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்ததாக எஸ்பி அலுவலக தொலைபேசி எண்ணில் ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை போலீஸார் விசாரணை செய்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் கமுதியைச் சேர்ந்த மணிராஜன் (23) போலி […]
Author: policeenews
காவலன் செயலி மூலம் தமிழகத்தில் முதல் கைது: சந்தேகப்படுபடி நடந்த 2 பேர் சிக்கினர்
பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை மிகுந்த அக்கறையுடன் பல காரியங்களைச் செய்து வருகிறது அதில் விழிப்புணர்வூட்டும் காவலன் செயலி ஒன்று. அதன் செயல்பாடு பரவலாக்கப்பட்ட நிலையில் ஆர்.கே.நகரில் காவலன் செயலி மூலம் 2 பேர் பிடிபட்டுள்ளனர். காவலன் செயலியை பெண்கள் பாதுகாப்புக்காக காவல்துறை உருவாக்கியுள்ளது. செல்போனில் பயன்படுத்தப்படும் இந்தச் செயலியில் உள்ள பட்டனை ஆபத்தில் இருக்கும் பெண்கள் அழுத்திய 15 நொடிகளில் காவல் கட்டுப்பாட்டறை, அருகில் உள்ள காவலர்கள் அனைவருக்கும் மெசேஜ் சென்று உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்குக் […]
மத்திய அரசின் உயரிய விருதை பெறும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம்
2019 ஆம் அண்டிற்கான தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கான மத்திய அரசின் உயரிய விருது (National Maritime Search and Rescue Award-2019)தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு கடலில் தத்தளித்தவர்களை மீட்டமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18 ஆம் தேதி புது டில்லியில் நடைபெறவிருக்கும் விழாவில் இவ்விருது வழங்கப்படவுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் ஐயா அவர்கள் வாழ்த்திய மகிழ்வான தருணம்…
சிங்கப்பூரில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் ஐயா அவர்கள் வாழ்த்திய மகிழ்வான தருணம்…
பணியிடைநீக்கம்; 2 ஆண்டுகள் வழக்கு!’ – இளம்பெண் தற்கொலை
பணியிடைநீக்கம்; 2 ஆண்டுகள் வழக்கு!’ – இளம்பெண் தற்கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட தஞ்சை இன்ஸ்பெக்டர் இந்த வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் காக்கி உடை உடுத்துவேன் என சேதுமணி மாதவன் தனது நண்பர்களிடம் கூறுவார். தஞ்சாவூரில் அகிலா என்ற இளம் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன் விசாரணையில் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. தற்போது இந்தத் தண்டனை ரத்து செய்யப்பட […]
ஆபாச படம் பார்த்தவர்களின் மொத்த லிஸ்ட்டும் ரெடியாம்! – வீடியோ என்று கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
ஆபாச படம் பார்த்தவர்களின் மொத்த லிஸ்ட்டும் ரெடியாம்! – வீடியோ “யாரெல்லாம் ஆபாச வீடியோவை பார்த்தார்கள், எத்தனை மணிக்கு பார்த்தார்கள், அதை யாருக்கெல்லாம் ஷேர் செய்தார்கள், அவர்களின் செல்போன் நம்பர், ஐபி நம்பர் என்ன என்ற லிஸ்ட் எடுத்துவிட்டோம்… மொத்த பேரும் கைதாவார்கள்.. 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் உறுதி” என்று கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
ஒருமாதங்களில் 10 சவரன் நகை ஐந்து செல்போன் சொகுசு வாழ்க்கை!’ – காஞ்சியை அதிரவைத்த திருடன்
காஞ்சிபுரம் ஐயப்பாநகர்,அதியமான்நகர்,காந்திநகர்,திருபருத்திகுன்றம் சாலை,பல்லவநகர், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவீடுகளில் இரவு நேரங்களில் நகை மற்றும் செல்போன் அடிக்கடி திருடு போவது வாடிக்கையாக இருந்தது. தொடர்ந்து திருட்டு நடப்பதால் அதற்கான வழக்குகள் கூடிக்கொண்டேபோக போலீஸார் வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதுதொடர்பாக விசாரிக்க காஞ்சிசரக டி.ஜ.ஜி, திருமதி.தேன்மொழி அவர்களின் ஆலோசனையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா சாமுண்டீஸ்வரி அவர்களின் உத்தரவில் ஏ.டி.எஸ்.பி பாலசந்தர் அவர்களின் மேற்பார்வையில் டி.எஸ்.பி. கலைச்செல்வன் காஞ்சிதாலுக்கா காவல்ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை […]
சென்னை கீழ்பாக்கம் மற்றும் புளியந்தோப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆய்வு செய்து மழைநீர் அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் 01.12.2019 அன்று காலை, சென்னையில் கீழ்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை மற்றும் புளியந்தோப்பு ஜீவா இரயில் நிலைய இரயில்வே சுரங்கப்பாதை பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, காவல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு மழைநீரால் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி வாகனங்கள் சீராக செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அப்பகுதிகளிலுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் சரி செய்து நிவாரணப் […]
அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளை வெளிமாநிலம் சென்று கைது செய்த தனிப்படை காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, வியாசர்பாடி, பெரியார் நகரில் வசித்து வந்த பிரபாகரன் வ/27, த/பெ. ஆனந்தன் என்பவர் கடந்த 10 வருடங்களாக அம்பத்தூர், அத்திப்பட்டு பகுதியில் ஓம் பிளாஸ்டிங் & கோட்டிங் என்ற பெயரில் இரும்பு வெல்டிங் செய்யும் கம்பெனியை நடத்தி வந்துள்ளார். கடந்த 22.11.2019 அன்று காலை 10.30 மணியளவில் பிரபாகரன் வழக்கம் போல் கம்பெனிக்கு சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தந்தை ஆனந்தன் பிரபாகரனை போன் மூலம் தொடர்பு கொண்டபோது போனை எடுக்காததால் […]










