
பிங்க் பெட்ரோல்களை இயக்க 7 பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்ப்பட்டது
19.02.2026 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட பிங்க் பெட்ரோல்களை இயக்குவதற்காக புதிதாக 7 பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான ஓட்டுனர் உரிமங்களை காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் மதுரை மாநகரத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிந்தாமணி மற்றும் மாடக்குளம் காவல் நிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்யபட்ட புதிய காவல் வாகனங்களை,
காவல் ஆணையர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள் போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.





