தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது. அதன்படி இராமநாதபுரம் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்தவர்களுக்கு, இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நாளை (06.11.2019) புதன்கிழமை உடல்தகுதி தேர்வு தொடங்குகிறது. ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.
Author: policeenews
தேசிய ஒற்றுமை தினத்தன்று நாம் உறுதி ஏற்போம் – காவல் துணை கண்காணிப்பாளரின் பேச்சு
தூத்துக்குடி மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாள் மற்றும் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காமராஜ் கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி 31.10.2019-ம் தேதியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாணவர்களிடத்தில் பேசுகையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்வது முக்கியம், ஓட்டுநர் உரிமம் […]
காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு தேனி, திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்களுக்கு நாளை(06.11.2019) தொடக்கம்
தேனி மாவட்டம் தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது. அதன்படி தேனி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்தவர்களுக்கு திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நாளை புதன்கிழமை உடல்தகுதி தேர்வு தொடங்குகிறது. இதில் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 1915 ஆண்கள் மற்றும் 982 பெண்கள் மொத்தம் 2,597 நபர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கு நாளை முதல் 8-ஆம் தேதி வரை உயரம், எடை, மார்பளவு […]
டெல்லியில் சீருடையுடன் போலீசார் திடீர் போராட்டம் …
டெல்லியில் தொடர் மோதல் போக்கில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை கோரி காவல்துறை தலைமையகத்தை போலீசார் முற்றுகையிட்டனர். கடந்த சனிக்கிழமை அன்று திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் நீதிமன்றம் போர்க்களமானது. இதேபோல் நேற்றும் கர்கர்டூமா ((karkardooma)) நீதிமன்றத்தில் மோதல் ஏற்பட்டது. மேலும், போலீஸ் ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கும் வீடியோவும் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர்கள் தொடர் மோதல் போக்கில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியும் […]
தேனி மாவட்டம் 31.10.2019 தேனி மாவட்ட காவல் துறை சார்பாக மக்களின் பாதுகாப்பு நலன் கருதி “தேனி காவலன்” எனும் பெயரில் புதிய செயலி (Android Application -play store – Theni kavalan) உருவாக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் 31.10.2019 தேனி மாவட்ட காவல் துறை சார்பாக மக்களின் பாதுகாப்பு நலன் கருதி “தேனி காவலன்” எனும் பெயரில் புதிய செயலி (Android Application -play store – Theni kavalan) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் தற்போது தேனி மாவட்ட காவல் நிலையங்கள் மற்றும் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை எடுத்து பயன் பெறலாம். மேலும் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது அதன் விபரத்தை தேனி காவலன் […]
பணியின் போது சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு!
பணியின் போது சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்கள், சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர் மற்றும் ஆட்டோவில் பயணி தவறவிட்ட 25 சவரன் தங்க நகைகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன்,நேரில் அழைத்து பாராட்டினார். 1.பட்டாபிராம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய நபர் கைது. 12 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!!! சென்னை, பட்டாபிராம், அண்ணம்பேடு, பெத்தேல் நகரில் கடந்த 14-ந்தேதி […]
MBBS to IPS ஆன கதை!* புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல்துறைக் கண்காணிப்பாளராக அருண் சக்திகுமார் பொறுப்பேற்க உள்ளார்.
MBBS to IPS ஆன கதை!* புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல்துறைக் கண்காணிப்பாளராக அருண் சக்திகுமார் பொறுப்பேற்க உள்ளார். சொந்த ஊர்:- கிருஷ்ணகிரி. படிப்பு:- சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தவர். ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பது இவர் கனவாக இருந்தது. 2012-ம் ஆண்டில் ஐ.பி.எஸ் ஆகத் தேர்வானார். இவர் முதன்முதலில் நெல்லை மாவட்டம் தாழையூத்து ஸ்டேஷனில்தான் ஐ.பி.எஸ்-ஸாகப் பொறுப்பேற்றார். ஆறு மாதங்கள் இங்கு பயிற்சி எடுத்தார். பின்னர் மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கு துணை […]
முதியவரை மீட்ட விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.கணகேசன்
30.10.19-ந் தேதி விழுப்புரம் சிக்னலில் சென்னை செல்லும் பேருந்து நிழற்குடையில் உடல் நலம் குன்றி ஆதரவற்று பசியோடு ஒரு முதியவர் படுத்துக் கிடந்தார். இவற்றை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் காவல் ஆய்வாளர் திரு.கணகேசன் அவர்கள் இதனை கண்டு காவலர்களின் உதவியுடன் உடனடியாக ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து தனது சொந்தப் பணத்தில் தானே முன்னின்று அந்த முதியவரை தூக்கி ஆட்டோவில் ஏற்றி முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மனித நேயத்தோடு […]
தமிழகத்தின் பல காவல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அழைப்பு
தமிழகத்தின் பல காவல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து இன்று வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. நெல்லை சேரண்மகாதேவி காவல் நிலையம், தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து, அனைத்து காவல் நிலையங்களும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்புகள் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
வடமதுரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விபத்துக்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்காக 3 சிசிடிவி கேமராக்களை பொருத்திய வடமதுரை போலீசார்
03.11.19 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வேல்வர்கோட்டை பிரிவு அருகே உள்ள சாலையில் மாவட்ட கண்காணிப்பாளர் உயர் திரு இரா.சக்திவேல் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலைய ஆய்வாளர் திரு.கருப்புசாமி அவர்களின் தலைமையில் 3 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டன.இதன் மூலம் விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்கவும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு செல்வர்களை கண்டுபிடிக்கவும் இந்த கேமராக்கள் பயன்படுகிறது.இதனை யறிந்த பொதுமக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை […]