திண்டுக்கல் மாவட்டம் 02.11.19 கொடைக்கானல் பகுதிகளில் தொடர் மழையினால் நிலச்சரிவு மற்றும் காற்றினால் மரங்கள் போன்றவைகள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனை சரி செய்யும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் உயர் திரு. இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவின் படி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பேரிடர் மீட்புக்குழு(TNDRF) ஒரு ஆய்வாளர் உட்பட 39 போலீசார்கள் வரவழைக்கப்பட்டு கொடைக்கானல் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் காற்றில் சாய்ந்த மரங்கள் போன்றவற்றை சரி செய்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். […]
Author: policeenews
கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா ; “கூகுள் மேப்ஸ் “யு.ஆர்.எல்” (“Url” Link) bit.ly/2PAk7pU லிங்கை பொதுமக்கள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் பயன்படுத்திட எஸ்.பி.கோரிக்கை
தூத்துக்குடி 2019 அக்டோபர் 31 ;தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இவ்வாண்டு 02.11.2019 அன்று நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, பக்தர்களின் பாதுகாப்பையும், வசதியையும் முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், தலைமையில் சுமார் 3500 காவல்துறையினரை வைத்து கீழ்கண்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது….இந்த ஆண்டு பக்தர்களின் […]
59- வது தமிழ்நாடு மாநில காவல் துறை மண்டலங்களுக்கிடையான தடகள போட்டியில் வெற்றி பெற்ற காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி னார்.
கடந்த 13.10.2019 முதல் 16.10.2019 வரை 4 நாட்கள் மதுரை MGR மைதானத்தில் நடைபெற்ற 59-வது தமிழ்நாடு மாநில காவல் துறை மண்டலங்களுக்கிடையான தடகள போட்டியில் அனைத்து மண்டலத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆளிநர்கள் வரை கலந்துக்கொண்டனர். இதில் சென்னை பெருநகர காவல் துறை முதல் இடத்தை பிடித்தது. மேற்படி போட்டியில் சென்னை பெருநகர காவல் துறையினர் 37 தங்கம், 14 சில்வர் மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.மேற்படி காவல் துறை மண்டலங்களுக்கிடையான […]
கஞ்சா அடிக்கும் பூசாரியை கண்டித்த | கோவில் நிர்வாகியை கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது
சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் 7வது தெருவைச் சேர்ந்த ஜானகிராமன் (50), இவர் ஐசிஎப் தொழில்சாலையில் பணிபுரிந்து வருகிறார். ஐசிஎப் அண்ணா தொழிற் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். தீபாவளி தினத்தன்று இரவு 10.00 மணியளவில் அளவில் பெரவள்ளூர் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பட்மேடு சுடுகாடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் நண்பர் தயாளன் என்பவருடன் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரது தலையில் கொடூரமான வெட்டி படுகொலை செய்து விட்டு […]
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி
தேசிய ஒற்றுமை நாளான இன்று (31.10.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு.மகேஷ் IPS., காவல் துணை ஆணையர் குற்றம் முனைவர் திரு. செந்தில்குமார் அவர்கள், காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் காவல் அமைச்சு பணியாளர்கள் அனைவரும் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைபாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு எங்களையே உவந்தளிப்போம் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு […]
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 31.10.2019 நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த தினத்தை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. இரா.சக்திவேல் அவர்களின் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கீழ்க்கண்ட உறுதிமொழியை காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண […]
பிரிக்கப்படும் மாவட்டங்களில் காவல்துறை பணியிடம் மாறுதல் விருப்பம் தெரிவித்தல்..
பிரிக்கப்படும் மாவட்டங்களில் காவல்துறை பணியிடம் மாறுதல் விருப்பம் தெரிவித்தல்..