இடம்:திருப்பூர் மாநகரம் நிலையம்:வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(இ.கா.ப)அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(இ.கா.ப) அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர் உயர்திரு.வெற்றிவேந்தன் ஆலோசனையின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.கணேசன் தலைமையில் தலைமை காவலர் காளிமுத்து(கா.எண் 574) மற்றும் முதல்நிலைக் காவலர் ஸ்டாலின்(கா. எண்316)ஆகியோர் தனிப்படை அமைத்து கொங்கு மெயின்ரோடு திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்த பனியன் குடோன் உரிமையாளர் கன்னியாகுமரியை சேர்ந்த பாபு என்பவரை கொலை செய்த வழக்கில் […]
Police Recruitment
பள்ளி வேன் நடுவழியில் பஞ்சர் : உதவிய காவலருக்கு குவியும் பாராட்டுகள்
பள்ளி வேன் நடுவழியில் பஞ்சர் : உதவிய காவலருக்கு குவியும் பாராட்டுகள் திருப்பூர் மாவட்டம்¸ மூலனூரில் தனியார் பள்ளி வேன் பஞ்சர் ஆகிய நின்ற நிலையில்¸ அங்கு பணியிலிருந்த மூலனூர் காவல் நிலைய காவலர் திரு. ஆனந்த் அவர்கள் டயரை கழற்றி¸ மாற்றிவிட்டார். இச்செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி காவலருக்கு பொதுமக்கள் மத்தியில் பெருமளவு பாராட்டுகள் குவிந்து வருகிறது. போலீஸ் இ நியூஸ்சென்னை செய்தியாளர் பாலமுருகன்
மத்திய அரசின் உயரிய விருதை பெறும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம்
2019 ஆம் அண்டிற்கான தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கான மத்திய அரசின் உயரிய விருது (National Maritime Search and Rescue Award-2019)தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு கடலில் தத்தளித்தவர்களை மீட்டமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18 ஆம் தேதி புது டில்லியில் நடைபெறவிருக்கும் விழாவில் இவ்விருது வழங்கப்படவுள்ளது.
பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்: சென்னை காவல் ஆணையர் அறிவுரை
சட்டம், ஒழுங்கு நிலை குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப் போது பெண்களின் பாதுகாப் புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறி வுரை வழங்கியுள்ளார். குண்டர் சட்டம் கொலை, கொள்ளை, வழிப் பறி உட்பட அனைத்து வகை யான குற்ற செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தொடர் […]
காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு திட்டம்: துடியலூர் பகுதிக்குட்பட்ட 30 இடங்களில் அமல் – குற்றச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு தீவிரம்
குற்றச் சம்பவங்களை தடுக்க, துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளதுடன், 6 காவல் நிலை யங்களில் ரோந்து குழுவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல்துறை நிர்வாகத்தில் 5 உட்கோட்டங்களும், 35 காவல் நிலையங்களும் உள்ளன. அடிதடி, திருட்டு, தகராறு, வழிப்பறி, கொள்ளை உட்பட பல்வேறு புகார்கள் தொடர்பாக, மாவட்டப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். […]
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தலைமை காவலர் 52 வயதிலும் பதக்கம் வென்று சாதனை
மாநில அளவிலான தமிழ்நாடு மாஸ்டர் தடகள விளையாட்டு போட்டியில் காவல்துறை சார்பில்¸சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி.வனிதா என்பவர் சங்கிலி குண்டு எறிதலில் மூன்றாம் இடமும்¸ மும்முறை தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்தார். இவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தற்போது விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று வருகிறார். மேலும் சேலம் மாநகர, தெற்கு போக்குவரத்து தலைமை காவலர் திரு.டோமினிக் சாவியோ என்பவர் சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டு […]
போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டேன் – சமுத்திரகனி போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டதாக நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டேன் – சமுத்திரகனி போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டதாக நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார். மதுரை மாநகர காவல்துறை சார்பாக அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் ‘வெல்வோம்’ என்ற குற்ற தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் குறும்படத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர். நடிகர் சசிகுமார் பேசுகையில், ‘நடிகர்களை வைத்து குறும்படம் தயாரித்து […]
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. தெ.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாள் : 18 11 2019 இடம் : காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. தெ.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் திரு. தெ.கண்ணன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை காஞ்சிபுரம் மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளர் திரு.திருவள்ளுவர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். செங்கல்பட்டில் மாவட்ட காவல் அலுவலக இடம் தேர்வு செய்யப்படும் வரை […]
விருதுநகர் மாவட்ட செய்திகள்
*விருதுநகர் மாவட்ட செய்திகள்:- காவலர் இரங்கல் செய்தி:- அருப்புக்கோட்டை சப்டிவிசனுக்குட்பட்ட திருச்சுழி அருகே எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டையாவாக பணிபுரிந்து வந்த சாம்பிரேம்ஆனந்த் முத்துராமலிங்கபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது,அத்துடன் தலைக்கவசம் அணிந்து சென்று கொண்டிருந்தநிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே வந்ததில் நிலைதடுமாறி எதிரே இருந்த பேரிக்கார்டு மீது மோதி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் கல்லூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் இதனால் காவல் […]
பெண்ணை தாக்கியதாக சிதம்பரம் கோயில் தீட்சிதர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்ணை தாக்கியதாக தீட்சிதர் மீது போலீ ஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதியின் மனைவி லதா (51). காட்டுமன்னார் கோவில் அருகே ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகி றார். இவர் தனது மகன் ராஜேஷ் (21) பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் இரவு நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் கோயிலுக்கு சென்றுள்ளார். […]