சென்னை: தமிழக காவல்துறையில் 50 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இது குறித்த விவரம்: தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி, தமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதில் முக்கியமாக திண்டுக்கல் மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி. ஏ.டி.மோகன்ராஜ் […]
Police Department News
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று 20/11/19 ம் தேதி கஞ்சா வியாபாரி களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில்
விருதுநகர் மாவட்ட செய்திகள்:- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று 20/11/19 ம் தேதி கஞ்சா வியாபாரி களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் ராஜபாண்டி 29/19 S/oதிருவாசகம் என்பவர் மாலை 5 மணி அளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு வெங்கடேசன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு மகேஸ்வரன் மற்றும் அவர்களின் தனிப்படையினர் சிறப்பாக […]
விருதுநகர் மாவட்ட செய்திகள்:-
விருதுநகர் மாவட்ட செய்திகள்:- அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகில் நேற்று மாலை அன்பு நகரை சேர்ந்த ராஜபாண்டி என்பவரை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்,அதனைத்தொடர்ந்து கொலையாளியை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டநிலையில் சமயோசிதமாக காவல் துறையினர் தப்பி ஓடிய கொலையாளி நெசவாளர் காலனியை சேர்ந்த மோகன கண்ணன் என்பவரை அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் கைது செய்தனர்,தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக VRK.ஜெயராமன்MA,Mphil மாநில செய்தியாளர் அருப்புக்கோட்டை விருதுநகர் […]
சென்னை வடக்கு கூடுதல் ஆணையாளர் ஆர். தினகரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
அரசு பள்ளியை தத்து எடுத்த புலியந்தோப்பு காவல் ஆய்வாளர் … 🙏💐 புளியந்தோப்பு, நடுத்தர மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில், அரசுப் பள்ளியை நோக்கி பயணிக்கும் குழந்தைகள் பெரும்பாலானோர் ஏழை எளியோரின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில் குழந்தைகள் வளரும் சூழ்நிலைதான் அவர்களின் வருங்காலத்தை தீர்மானிக்கும் என்ற வகையில், புலியந்தோப்பு நடுநிலைப்பள்ளி போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையை கண்ட புலியந்தோப்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியர் ஹெலனைச் சந்தித்து அந்த பள்ளியை தத்தெடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். […]
டிஜிபி அசுதோஷ் சுக்லா IPS திடீர் மாற்றம்
மண்டபம் அகதிகள் முகாம் டிஜிபி அசுதோஷ் சுக்லா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற பல கூடுதல் டிஜிபிக்களில் அசுதோஷ் சுக்லாவும் ஒருவர். 1986-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான சுக்லா சென்னை காவல் ஆணையராகப் பதவி வகித்துள்ளார். சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகித்த அவர், பின்னர் அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்தார். சட்டம் ஒழுங்கு டிஜிபி போட்டியில் சில ரிமார்க் காரணமாக பின் […]
CCTV கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு
மதுரை மாநகரில் குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் நேற்று (20.11.2019) ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில் தெருவில் 22 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் நிகழ்ச்சியை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். ஜெய்ஹிந்துபுரம் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து 22 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தம் செய்ய அனைத்து […]
தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு.
தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் காவல் ஆணையரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆளிநர்கள் வரை பலர் கலந்துக்கொண்டனர். உறுதிமொழி “நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றைக் தாக்கவும், வலுப்படுத்தவும், என்னை அர்ப்பணித்துச் செயல்படுவேன் என்று மனமார உறுதி கூறுகிறேன்”. “நான் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்றும், மதம், மொழி, வட்டாரம் மற்றும் […]
விருதுநகர் மாவட்ட செய்திகள்
*விருதுநகர் மாவட்ட செய்திகள்:- காவலர் இரங்கல் செய்தி:- அருப்புக்கோட்டை சப்டிவிசனுக்குட்பட்ட திருச்சுழி அருகே எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டையாவாக பணிபுரிந்து வந்த சாம்பிரேம்ஆனந்த் முத்துராமலிங்கபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது,அத்துடன் தலைக்கவசம் அணிந்து சென்று கொண்டிருந்தநிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே வந்ததில் நிலைதடுமாறி எதிரே இருந்த பேரிக்கார்டு மீது மோதி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் கல்லூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் இதனால் காவல் […]
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த காரின் தீயை அணைத்த காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, சூளையைச் சேர்ந்த ரஞ்சித், வ/42 என்பவர் அவரது மனைவி மற்றும் தங்கையுடன் TN 04 AM 4609 என்ற பதிவெண் கொண்ட Hyndai Grand I 10 காரில் நேற்று 18.11.2019 இரவு சுமார் 07.40 மணியளவில் F2 எழும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரின் இடது பக்க முகப்பில் தீப்பற்றி எரிவதை கண்ட கார் ஓட்டுநர் மூல்சிங் காரை நடு ரோட்டில் நிறுத்தி அனைவரையும் இறங்கிவிட்டு தீயை அணைக்க […]
சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் தகவல் பரிமாற கூடாது: மாணவ, மாணவியருக்கு காவல் ஆணையர் அறிவுரை
சமூக வலைதளங்களில், தெரியாதவர்களிடம் உரையாடுவதோ, தகவல் பரிமாற்றம் செய்வதோ கூடாது என பள்ளி மாணவ, மாணவியருக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார். குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் சார்பில் எழும்பூரில் உள்ள மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இதில்சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை […]










