Police Department News

வியாசர்பாடியில் சேதமடைந்த காவல் நிலையம் சிரமப்படும் காவல்துறையினர்

சென்னை: சென்னை வியாசர்பாடி காவல் நிலையம், அந்த பகுதியில் ஏற்கனவே இருந்த காவல் குடியிருப்பில் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலைய வளாகத்தில் வளர்ந்து நிற்கும் செடி, கொடிகள், பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் அங்கு குவிந்து கிடக்கும் பழுதடைந்த வாகனங்கள் ஆகியவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. மொத்தம் 15 வீடுகள் கொண்ட இந்த காவல் குடியிருப்பு சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. அதே பகுதியில் சுமார் 25 […]

Police Department News

அதிநவீன படகுகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தீவர சோதனை

கன்னியாகுமரி: கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காக அடிக்கடி கடல் பகுதியில் கண்காணிப்பு நடத்தபட்டு வருகிறது. அதன்படி நேற்று கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சவுகாஜ் ஆபரேஷன் என்ற பெயரில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வருகிற 19-ந்தேதி மதியம் 12 மணி வரை நடைபெறும். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு சென்னை வருகையை முன்னிட்டு இந்த சோதனைகள் செய்யபட்டது. கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு சொந்தமான 2 அதிநவீன படகுகள் மூலம் கடல் பகுதியை தீவிரமாக […]

Police Department News

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சிபி சக்கரவத்தி, IPS அவர்களின் உத்தரவின் படி

காவல்துறை மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப், போலிஸ் இ நியுஸ், பொதுமக்கள், இணைந்து நடத்திய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீரர்களுக்கு பொன்னேரி வட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. P.ராஜா அவர்கள் பரிசுகள் வழங்கினார் பொன்னேரி காவல்நிலைய ஆய்வாளர் R.மகேந்திரன் அவர்களும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் தலைவர் டாக்டர் சின்னதுரை அவர்களும் மற்றும் பொன்னேரி காவல்நிலைய துணை ஆய்வாளர் ரதி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Police Department News

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வங்கி மேலாளர் போல் பேசி,ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வங்கி மேலாளர் போல் பேசி, கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். மணியகாரன்பட்டியை சேர்ந்த யாக்கோப் என்பவர் ஆண்டிபட்டியிலுள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், அந்த வங்கியின் மேலாளர் போல் பேசி, வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளார். யாக்கோப்பும் அவருக்கு விவரங்களைக் கூறிய நிலையில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 82 ஆயிரம் […]

Police Department News

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகில் சத்தி-கோவை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்ககு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகில் சத்தி-கோவை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் (TN 37 AE 0105)தந்தை மற்றும் அவரது மகன் பயணம் செய்து கொண்டிருந்தனர் அப்போது குடிபோதையில் தந்தை வாகனத்தை ஓட்டியதால் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி(KA 09 A 8487) குறுக்கே வாகனம் சென்றது, லாரி ஓட்டுனரின் சாதூரியத்தால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் மேலும் காயமடைந்த தந்தை மற்றும் மகன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புஞ்சை புளியம்பட்டி காவல் […]

Police Department News

இணையவழி அச்சுறுத்தல்களுக்கு காவல்துறையினர் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி யுள்ளார்.

இணையவழி அச்சுறுத்தல்களுக்கு காவல்துறையினர் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி யுள்ளார்.

Police Department News

ஹவாலா மோசடி: ரூ.3 கோடி மதிப்புள்ள டாலர்களை வைத்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண் கைது

25 வயது ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண் டாலர்களில் ரூ.3 கோடி ரொக்கம் வைத்திருந்ததையடுத்து வருவாய் உளவுத்துறை அதிகாரிகளால் திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார். தேவ்ஷி குல்ஷ்ரேஷ்தா என்ற இந்தப் பணிப்பெண் திங்கள் காலை டெல்லியிலிருந்து புறப்படும் விமானத்தில் பணியாற்றி வந்த போது வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் திடீரென மேற்கொண்ட ரெய்டில் டாலர்களில் ரூ.3 கோடி ரொக்கத்துடன் சிக்கினார். நிதிமுறைகெடு ஹவாலா மோசடிப் பேர்வழி ஒருவர் இவரை இந்தப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது தெரிய வர இந்த நபரும் கைது […]

Police Department News

கொடைக்கானலில் புதிய காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை

திண்டுக்கல்:  கொடைக்கானல் நகரில் உள்ள கவி தியாகராஜர் சாலையில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பாக ரூ.57 லட்சம் செலவில் காவல் உயர் அதிகாரிகளுக்கான ஓய்வுவிடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியினை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– கொடைக்கானல் நகரில் கட்டப்பட்டு வரும் காவல் அதிகாரிகளுக்கான ஓய்வுவிடுதி அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இதில் 4 அறைகள் மற்றும் ஒரு உதவியாளர் அறை ஆகியவை நவீன வசதிகளுடன் […]

National Police News Police Department News

இந்திய அளவில் சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்எஸ் புரம் காவல் நிலையம் தேர்வு

இந்திய அளவில் சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்எஸ் புரம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த காவல் நிலையத்துக்கான பதக்கத்தை ஆய்வாளர் ஜோதி பெற்றுக்கொண்டார். கான்பூரில் நடைபெற்ற காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதக்கம் வழங்கினார்.

Police Department News

குளித்தலை அருகே பேருந்தை சேதப்படுத்தியதாக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசுப் பேருந்து கண்ணாடிகளை உடைத்ததாக கைது செய்யப்பட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். நச்சலூரில் இருந்து குளித்தலை நோக்கி சென்ற பேருந்தின் பின்பக்க கண்ணாடிகளை நங்கவரம் அருகே மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேருந்தை ஓட்டிவந்த தற்காலிக ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் வசித்து வரும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரை குளித்தலை காவல்துறையினர் கைது செய்தனர்